29.05.2026

சௌதியில் மரண தண்டனை பெற்ற கேரள கார் ஓட்டுநரை காப்பாற்ற ரூ.34 கோடி குருதிப் பணம் திரண்டது எப்படி?
கேரளா, சௌதி அரேபியா, குருதிப் பணம்பட மூலாதாரம்,Photo Credit: Naseer
படக்குறிப்பு,அப்துல் ரஹிமின் ஆயுள் தண்டனை மே 20-ஆம் தேதி நிறைவடைந்தது.
கட்டுரை தகவல்
எழுதியவர்,இம்ரான் குரேஷி
பதவி,பிபிசி ஹிந்திக்காக
பிரசுரிக்கப்பட்டது
24 மே 2026
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
“எனது அம்மா ஃபாத்திமா பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அப்துல் ரஹிம் அவரது கண் முன் வரும்போது தான் அவர் நம்புவார்.”
அப்துல் ரஹிம் என்பவரின் சகோதரர் நசீரின் வார்த்தைகள் இவை. இவருக்காக கேரளம் உள்பட உலகம் முழுவதும் நிதி திரட்டும் செயலி மூலம் ‘குருதிப் பணமாக (Blood Money)’ ரூ.34 கோடி திரட்டப்பட்டுள்ளது.
இந்த அளவிலான குருதிப் பணம் இந்தியாவில் இதற்கு முன்னதாக திரட்டப்பட்டதில்லை.
நசீரின் கவலைகள் 20 ஆண்டுகள் பழையன. 2006-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நசீரின் குடும்பம் சிரமங்களைச் சந்தித்தது. அப்போது கோழிக்கோட்டில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த ரஹிம் ஓட்டுநராக வேலை செய்ய சௌதி அரேபியாவிற்குச் சென்றார்.















