தேதி: 5 ஏப்ரல் 2026



அவர் தனது உரையில், மாணவர்களுடன் கழித்த காலத்தையும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலையும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். “அவர்கள் செய்த சேவையை மறக்க முடியாது; அவர்களின் பங்களிப்பு அளவிட முடியாதது,” என அவர் தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற “Temu Anwar” நிகழ்ச்சியில், மாணவர்கள் உலக அரசியல், கல்வி மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து பல கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரதமர், தற்போதைய உலக நிலைமைகள் மிகுந்த அதிருப்தி மற்றும் அசாதாரணத்தன்மையை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
அவர் குறிப்பாக மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் உருவாகியுள்ள பதற்ற நிலையை சுட்டிக்காட்டினார். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்கள், அமெரிக்காவின் ஆதரவுடன் தீவிரமடைந்து வருவது, உலகளாவிய அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
காசா பகுதியில் நடைபெறும் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழப்பு, அடிப்படை கட்டமைப்புகள் அழிவு மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் துயரம் குறித்து அவர் கவலை வெளியிட்டார். மேலும், சில மேற்கு நாடுகள் இந்தச் சூழ்நிலையில் மௌனம் காப்பது அல்லது ஆதரவு வழங்குவது “மிகவும் வெளிப்படையான இரட்டை நிலைப்பாடு” என விமர்சித்தார்.
“மனித உரிமைகள் குறித்து பேசும் நாடுகளே, அநீதி மற்றும் கொடுமை நேரில் நிகழும்போது அமைதியாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என அவர் வலியுறுத்தினார்.
கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், அறிவு மட்டுமே போதாது; மனிதநேயமும் மதிப்புகளும் இணைந்த கல்வியே முக்கியம் என கூறினார். Harry R Lewis எழுதிய “Excellence Without a Soul” என்ற கருத்தை மேற்கோள் காட்டி, அறிவாற்றலுடன் கூடிய நெறிமுறை உணர்வு அவசியம் என விளக்கினார். அவர் Harvard Universityயைச் சேர்ந்த கல்வியாளரின் கருத்தை நினைவுபடுத்தினார்.
“நாம் உருவாக்க வேண்டியது அறிவாளிகள் மட்டுமல்ல; மனிதநேயமும் ஒழுக்கமும் கொண்ட தலைமுறை,” என அவர் கூறினார்.
இறுதியாக, கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தி, சமத்துவமான மற்றும் மனிதநேயமிக்க சமூகத்தை உருவாக்குவது அனைவரின் பொறுப்பு என அவர் வலியுறுத்தினார். “இது ஒரு பொறுப்பு மட்டுமல்ல, ஒரு அமாநா,” என அவர் குறிப்பிட்டார்.















