சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தொடர வேண்டும்- சிலாங்கூர் பி.கே.ஆர் மகளிர் பிரிவு அறிக்கை

ஷா ஆலாம், நவ 11-
சிலாங்கூர் மாநிலத்தின் அரசாங்கத் தலைமை மாற்றம் குறித்து நேற்று வெளியான செய்திகள் குறித்து அறிந்திருப்பதாக, சிலாங்கூர் மகளிர் PKR பிரிவு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி புசாராக டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் தனது முழுப் பதவிக் காலத்தை முடிக்கும் வரை அவருக்குத் தங்கள் முழுமையான ஆதரவை் தங்கள் அணி வலியுறுத்தியுள்ளது.
இந்த ஆதரவு, மாநில நிர்வாகத்தின் தொடர்ச்சி, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அதன் செயல்திறனை உறுதிப்படுத்த அவசியமானதாகும். மந்திரி புசார் அமிருடின் ஷாரி, தனது நிர்வாகம் முழுவதும், மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, வெளிப்படையான பார்வை மற்றும் முழுமையான நேர்மையுடன் மாநிலத்தை வழிநடத்துவதில் சிறந்த சாதனைகளை வெளிப்படுத்தியுள்ளார் என்று சிலாங்கூர் மகளிர் PKR நம்புகிறது.
மேலும், சிலாங்கூர் மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு வளர்ச்சி முயற்சிகள் மற்றும் அதிகாரமளிக்கும் திட்டங்கள் மூலம் பெண்களின் பங்கை உயர்த்துவதில் அவர் உயர்வான ஈடுபாட்டைக் காட்டியுள்ளார்.
சிலாங்கூர் முதல் திட்டம் (RS-1) மற்றும் சிலாங்கூர் மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தும் அவரது முயற்சிகளுக்கு மகளிர் PKR பாராட்டைத் தெரிவித்துள்ளது. அதே சமயம், ஆதாரமற்ற ஊகங்கள் அரசியல் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும், முதலீட்டாளர்களைத் தொந்தரவு செய்யும் மற்றும் மக்கள் நலனைப் பற்றிய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலைத் திசைதிருப்பும் என்பதால், மாநிலத் தலைமை குறித்த செய்திகளைப் பொறுப்புடனும் நெறிமுறையுடனும் வெளியிடுமாறு அனைத்து தரப்பினரையும் சிலாங்கூர் மகளிர் PKR வலியுறுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக சிலாங்கூர் மக்களின் நலனை உறுதிசெய்யும் வகையில், மந்திரி புசார் அமிருடின் ஷாரிக்குத் தொடர்ச்சியான மற்றும் உறுதியான ஆதரவை வழங்குவோம் என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.















