விதி தோற்றுப் போன அந்த நிமிடம்; அந்த குழந்தையின் காவலாக சினோஜின் கரங்கள்!

விதி தோற்றுப் போன அந்த நிமிடம்; அந்த குழந்தையின் காவலாக சினோஜின் கரங்கள்

12.02.2026

கண் இமைத்துத் திறக்கும் வேகத்தில் வாழ்க்கை தலைகீழாக மாற ஒரு நொடிபோதும்.

இன்று சமூக ஊடகங்களில் பார்த்த அந்த வீடியோ, ஒருவேளை மூச்சை அடக்கிக் கொள்ளாமல் பார்த்து முடிக்க முடியாத ஒன்று. சாலையின் ஒரு பக்கத்தில் அம்மாவை கண்டதும் ஆட்டோவில் இருந்து இறங்கி மறுபுறம் ஓடிய ஒரு பிஞ்சுக் குழந்தை… கண் முன்னே பாய்ந்து வரும் ஒரு பேருந்து…. விதி வேறு விதமாக இருந்திருந்தால், இன்று நாம் கேட்கப்போகும் செய்தி ஒரு பெரிய துயரச் செய்தியாகவே இருந்திருக்கும்.

ஆனால் அந்தக் குழந்தையின் முன், கடவுளைப் போல “சினோஜ்” என்ற ஓட்டுநர் இருந்தார். தன் முன்னால் திடீரென ஓடி வந்த குழந்தையை கண்ட அந்த நொடியில், சினோஜ் என்ற மனிதரின் மனநிலைத் தெளிவும் ஓட்டுநர் திறமையும் ஒன்றாகச் சேர்ந்து அந்த உயிரை மீட்டன. ஒரு நொடிகூட தாமதிக்காமல் பஸ்ஸை வலப்புறமாக திருப்பி திடீரென பிரேக் போட்ட அந்த முடிவு உண்மையிலேயே அதிசயமானது.

“எனக்கும் இதே வயதிலான இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அந்தக் குழந்தை ஓடி வருவதை பார்த்தபோது என் குழந்தைகளே நினைவுக்கு வந்தார்கள்…” என்று சொல்லும் போது, சினோஜின் வார்த்தைகளில் இன்னும் அந்த நடுக்கம் இருக்கிறது.

சினோஜ் இன்று சமூக ஊடகங்களின் நாயகன்.

சாலையோரம் நிற்கும்போதும், குழந்தைகளுடன் பயணம் செய்யும்போதும் பெற்றோர் காட்ட வேண்டிய எச்சரிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வீடியோ நமக்கு நினைவூட்டுகிறது. தனது உயிரையும் பணயமாக வைத்து அந்த குருந்தையை காப்பாற்றிய சினோஜுக்கு, ஒரு பெரிய சல்யூட்!.

மரணத்தின் பாதையில் இருந்து அந்தக் குழந்தையை மீண்டும் வாழ்க்கைக்குக் கொண்டு வந்த சினோஜ், நீங்கள் உண்மையிலேயே ஒரு ஹீரோ தான்! .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *