15வது சர்வதேச ந்ரித்யாஞ்சலி விழாவில் தலைமை விருந்தினராக இயக்குநர் SVCC பாலி பங்கேற்பு
பாலி | டிசம்பர் 29:2025

சங்கமம் குளோபல் அகாடமி ஏற்பாடு செய்த 15வது சர்வதேச ந்ரித்யாஞ்சலி நடன விழா, பாலியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கருட விஷ்ணு கென்சானா (Garuda Wisnu Kencana) கலாசார வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் SVCC பாலி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்தார். இந்திய பாரம்பரியக் கலைகளின் மகத்துவத்தையும், உலகளாவிய அளவில் இந்திய சாஸ்திரிய நடனத்தின் வளர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த விழா அமைந்தது.
இந்திய பாரம்பரியம், அர்ப்பணிப்பு மற்றும் கலாசார ஒற்றுமையை கொண்டாடும் மேடையாக விளங்கிய இந்நிகழ்வில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வுக்கு இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் (ICCR), இந்தோனேஷியாவிலுள்ள இந்திய தூதரகம் – ஜகார்த்தா, இந்திய துணைத் தூதரகங்கள் – மெடான் மற்றும் பாலி, JNICC ஜகார்த்தா, மற்றும் இந்திய அரசின் கலாசார அமைச்சகம் ஆகியவை ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்திய சாஸ்திரிய நடனக் கலையை உலக அரங்கில் மேலும் உயர்த்தும் முயற்சியாக இந்த சர்வதேச ந்ரித்யாஞ்சலி விழா அமைந்துள்ளதாக கலாசார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.















