மலேசியப் பிரதமர் டோஹா பயணம்: அராப்-இஸ்லாமிய அவசர உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

NO SALES; NO ARCHIVE; RESTRICTED TO EDITORIAL USE ONLY. NOTE TO EDITORS: This handout videos may only be used for editorial reporting purposes for the contemporaneous illustration of events, things or the people in the visual or facts mentioned in the caption. Reuse of the vide
கோலாலம்பூர், 14 செப்டம்பர் – மலேசியப் பிரதமர் டோஹாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு நடைபெறும் அராப்-இஸ்லாமிய அவசர உச்சி மாநாட்டில் பங்கேற்று, நாட்டின் சார்பாக உத்தியோகபூர்வ அறிக்கையை நாளை வெளியிடவுள்ளார்.
பிரதமர் தனது அறிக்கையில், சமீபத்தில் சயோனிச் இஸ்ரேல் மேற்கொண்ட கத்தார் மீதான தாக்குதலை கடுமையாக கண்டனம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் குறிப்பிட்டதாவது, “கத்தாருக்கு எதிரான தாக்குதல் சயோனிசின் கொடூரம் எல்லையற்றது என்பதை தெளிவாக காட்டுகிறது. பல தசாப்தங்களாக பாலஸ்தீனியரை ஒடுக்கி வந்த அவர்கள், இன்று அராப் மற்றும் இஸ்லாமிய நாடுகளின் இறையாண்மையையே அச்சுறுத்துகின்றனர். கத்தார் தாக்குதலுக்குள்ளாக முடிந்தால், எந்த நாடும் பாதுகாப்பாக இல்லை என்பதே உண்மை.”
மலேசியா, கத்தார் மற்றும் பாலஸ்தீன் மட்டுமல்லாது, உலகளாவிய சமாதானம் மற்றும் நீதிக்காக பாடுபடும் அனைத்துக் கூட்டாளிகளுடனும் ஒற்றுமையில் நிற்கும் என்று அவர் உறுதியளித்தார்.
“இது தான் அராப்-இஸ்லாமிய உலகமும் சர்வதேச சமுதாயமும் ஒன்றுபட்டு மனித மரியாதையை காப்பாற்றி, வன்முறையை நிறுத்தி, உலகளாவிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய தருணம்” என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
- மேலும், “மலேசியா ஒருபோதும் சரியாது, தளராது, மவுனமாக இருக்காது. பாலஸ்தீனியர்கள் மீதான ஒடுக்குமுறை தொடரும் வரை, நாங்கள் எப்போதும் அவர்களுடன் நிற்போம்” எனவும் தெரிவித்தார்.















