சரவாக் மாநிலத்தில் மோசமான வானிலை மற்றும் தொடர் கனமழைக்கு வாய்ப்பு- மெட் மலேசியா தகவல்

சரவாக் மாநிலத்தில் மோசமான வானிலை மற்றும் தொடர் கனமழைக்கு வாய்ப்பு- மெட் மலேசியா தகவல்

கூச்சிங், டிச 31-2025


மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று சரவாக்கில் உள்ள சில பகுதிகளை உள்ளடக்கிய மோசமான மற்றும் எச்சரிக்கை அளவிலான தொடர் மழை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று முதல் நாளை வரை அமலுக்கு வருகிறது.

இன்று காலை வெளியிட்ட ஓர் அறிக்கையில், மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்ததாவது: குச்சிங், செரியான் (செரியான்) மற்றும் சமரஹான் ஆகிய பகுதிகளில் மோசமான அளவிலான தொடர் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் மேலும் கூறுகையில், செரியான் (டெபெடு), ஸ்ரீ அமான் மற்றும் பெத்தோங் ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை அளவிலான தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில், பொதுமக்கள் வெள்ள அபாயத்திற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன், அவ்வப்போது அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் சமீபத்திய வானிலை தகவல்களை மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம், myCuaca செயலி, சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்கள் வழியாகப் பெறலாம் அல்லது மேலதிக விசாரணைகளுக்கு 1-300-22-1638 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *