இந்தியச் சினிமாவின் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பல ஆண்டுகள் காத்திருத்த படைப்பு “மருதாநாயகம்”

சென்னை, நவம்பர் 21 –

இந்தியச் சினிமாவின் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பல ஆண்டுகள் காத்திருத்த படைப்பு “மருதாநாயகம்” மீண்டும் அதிகாரப்பூர்வமாக நகர்த்தப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட சமீபத்திய போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

போஸ்டரில், அருவியை பின்னணியாகக் கொண்டு, ஒரு மாபெரும் பாறையை தாங்கி நிற்கும் போர்வீரர் வடிவம் இடம்பெற்றுள்ளது. இந்த சக்திவாய்ந்த காட்சியமைப்பு, படத்தின் வரலாற்றுப் பின்னணியையும், கதாநாயகன் எதிர்கொள்ளும் போராட்டத்தையும் வலுப்படுத்துகிறது.

போஸ்டரில் இடம்பெற்றுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, The Life of Mohammed Yusuf Khan எனும் வரலாற்றுச் சித்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தை உலக நாயகன் எழுதி இயக்குகிறார். இசை இளையராஜா, ஒளிப்பதிவு ரவி கே. சந்திரன், திரைக்கதை மற்றும் தொழில்நுட்ப பங்களிப்பில் பல முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர்.

படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (Kamal Films International) தயாரிக்கிறது. நீண்ட காலமாக காத்திருந்த இந்த பிரமாண்ட வரலாற்றுப் படம், புதிய போஸ்டரின் மூலம் மீண்டும் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மருதாநாயகம் தொடர்பான மேலும் பல அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *