கோலாலம்பூர், நவம்பர் 13, 2025
உலகளாவிய பொது தொடர்பு மாநாடு மற்றும் விழா 2025 – (Global Public Relations Conference & Festival 2025)

கோலாலம்பூரில் உள்ள World Trade Centre Kuala Lumpur வளாகத்தில் இன்று தொடங்கிய உலகளாவிய பொது தொடர்பு மாநாடு மற்றும் விழா 2025 (GPRCFMY 2025), நவம்பர் 15, 2025 (சனிக்கிழமை) வரை நடைபெறவுள்ளது.
இந்த மிகப்பெரிய சர்வதேச மாநாட்டை Public Relations Practitioners Society of Malaysia (PRactitioners) நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளராக டத்தோ பி கமலாநாதன் (Datuk P. Kamalanthan) செயல்படுகிறார்.


உலகம் முழுவதிலுமிருந்து 800-க்கும் மேற்பட்ட பொது தொடர்பு நிபுணர்கள், ஊடகத்துறை பிரதிநிதிகள், கல்வியாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மூன்று நாட்களாக நடைபெறும் இம்மாநாடு, பல முக்கிய கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் பணிப்பயிற்சிகளைக் கொண்டுள்ளது:
-
முதல் நாள் (13 நவம்பர்): The Future of Trust
-
இரண்டாம் நாள் (14 நவம்பர்): Humanity and Innovation
-
மூன்றாம் நாள் (15 நவம்பர்): Influence in a New Generation
மாநாட்டில் Tan Sri Nazir Razak, Jason McKenzie (இங்கிலாந்து) உள்ளிட்ட பல சர்வதேச மற்றும் உள்ளூர் நிபுணர்கள் முக்கிய உரையாற்றுகின்றனர். இந்த நிகழ்வின் மூலம், பங்கேற்பாளர்கள் உலகளாவிய பொது தொடர்பு மற்றும் ஊடக துறையின் புதிய போக்குகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர். மேலும், செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த புதிய தகவல் தொடர்பு நடைமுறைகளை ஆராயவும், சர்வதேச நிபுணர்களுடன் உறவுகளை உருவாக்கவும் ஒரு சிறந்த தளமாக இது அமைகிறது. மலேசியாவின் சர்வதேச பிராண்ட் வலிமையை உயர்த்தவும், வரவிருக்கும் Visit Malaysia Year 2026 முயற்சிக்கான முக்கிய தொடக்கமாகவும் இந்த மாநாடு காணப்படுகிறது. “இது மலேசியாவுக்குப் பெருமை சேர்க்கும் உலகளாவிய நிகழ்வு. தகவல் தொடர்பு மற்றும் ஊடகத் துறையில் மனிதத்துவத்தை முன்னிறுத்தும் புதிய யுகத்தின் தொடக்கமாக இது அமையும்,” என்றார்.
தலைமை ஒருங்கிணைப்பாளர்: டத்தோ பி கமலாநாதன்















