மதானி தீபாவளி திறந்த வீட்டு விழா 2025″ தேசிய மட்டத்தில், டிஜிட்டல்

கோலாலம்பூர், 18 அக்டோபர் 2025 – “மதானி தீபாவளி திறந்த வீட்டு விழா 2025” தேசிய மட்டத்தில், டிஜிட்டல்

அமைச்சகத்தின் ஏற்பாட்டில் மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் ஆதரவுடன், கோலாலம்பூரின் எல்.ஓ.டி F, KL Sentral பகுதியில் வண்ணமயமான மற்றும் உற்சாகமான சூழலில் நடைபெற்றது.

“ஒற்றுமையின் ஒளி, மதானியின் பிரகாசம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இவ்விழாவில், அமைச்சக ஊழியர்கள், உள்ளூர் சமூகங்கள், தொழில்துறை பங்குதாரர்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகள் என 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மலேசியாவின் பிரதமர் யாப் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் சிறப்புப் விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மேலும், டிஜிட்டல் அமைச்சர் யபி கோபிந்த் சிங் டியோ அவர்களும் நிகழ்வில் பங்கேற்றார்.

அதேபோல், தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் துணை அமைச்சர் யபி செனட்டர் சாரஸ்வதி கண்டசாமி, அந்த அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ’ ஹஸ்லினா பிந்தி அப்துல் ஹமிட், மற்றும் பல அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், பாரம்பரிய இசை, மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளால் சிறப்பாக நடைபெற்றது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *