மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் புயல், கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் புயல், கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை.

கோலாலம்பூர்:அக். 14, 2025
மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MET Malaysia) இன்று (அக். 14, 2025) நண்பகல் 12.00 மணி வரை ஆறு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய புயல், கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மோசமான வானிலை பெர்லிஸ் முழுவதும் மற்றும் கெடாவில் லங்காவி, குபாங் பசு, கோத்தா சேதார், போக்கோக் சேனா, பாடாங் தெராப், யான், பெண்டாங், கோலா மூடா, சிக், பாலிங் ஆகிய பகுதிகளிலும், பேராக்கில் உலு பேராக் பகுதியிலும், கிளந்தானில் தும்பாட், பாசிர் மாஸ், ஜேலி, தானா மேரா ஆகிய பகுதிகளிலும், சரவாக்கில் கூச்சிங் (லுண்டு) பகுதியிலும், மற்றும் சபா மாநிலத்தில் சண்டக்கான் (கினபாத்தாங்கான் மற்றும் சண்டக்கான்) பகுதிகளிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மி.மீ-க்கு மேல் மழைப்பொழிவுடன் இடி மின்னல் இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படும்போது அல்லது ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும்போது இந்த எச்சரிக்கை வெளியிடப்படுகிறது .

இது ஒரு குறுகிய கால எச்சரிக்கை (Short-term alert) என்பதால், ஒரு வெளியீட்டிற்கு ஆறு மணி நேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகும் என்றும் MET Malaysia தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *