கட்டுரைப் போட்டியில், ஜோகூர் பாரு ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப் பள்ளி மாணவர் கவிராஜ் யுவராஜா முதல் இடத்தை பெற்று RM1,000 பரிசையும் வெற்றிக் கிண்ணத்தையும் வென்றார்.

செகாமாட், அக். 2
மலேசிய தமிழ்ப் பள்ளி மாணவர் உதவி நிதி வாரியம் நடத்திய தென் மண்டல கட்டுரைப் போட்டியில், ஜோகூர் பாரு ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப் பள்ளி மாணவர் கவிராஜ் யுவராஜா முதல் இடத்தை பெற்று RM1,000 பரிசையும் வெற்றிக் கிண்ணத்தையும் வென்றார்.

அலோர்காஜா தமிழ்ப் பள்ளி மாணவி அஸ்மிதா விஜயன் இரண்டாம் இடம் (RM700), நீலாய் தமிழ்ப் பள்ளி மாணவி யசுனித்தா சுரேந்தர் மூன்றாம் இடம் (RM500) பெற்றனர்.

ஆறுதல் பரிசாக பல மாணவர்கள் RM100, கிண்ணம், பதக்கம், சான்றிதழ் பெற்றனர். ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் மாநிலங்களைச் சேர்ந்த 25 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

பரிசளிப்பு விழாவில் பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரீமின் இந்திய சிறப்பு அதிகாரி செல்வகுமரன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *