தீபாவளிக்காக கூடுதல் விடுமுறை கோரிக்கை மலேசிய இந்து சங்க தலைவர் தங்க கணேசன் வேண்டுகோள்

  1. கோலாலம்பூர்:30.09.2025

தீபாவளி பண்டிகைக்காக கூடுதல் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் அரசிடம் கோரியுள்ளது. அமைப்பின் தேசியத் தலைவர் தங்க கணேசன் கூறியதாவது:

“தீபாவளி நாளில் நடைபெறும் குடும்ப ஒன்று சேர்க்கை, கோயில் வழிபாடு, சமூக நிகழ்வுகளுக்கு ஒரு நாள் மட்டும் போதாது. பல மாநிலங்களில் வசிக்கும் குடும்பத்தினருடன் சந்திக்கவும் மக்கள் நீண்ட பயணம் மேற்கொள்வார்கள். எனவே, கூடுதல் விடுமுறை மிகவும் அவசியம்.”

அவரது கூற்றுப்படி, மலேசியாவின் பிற முக்கிய பண்டிகைகளுக்கு பல நாட்கள் விடுமுறை வழங்கப்படுவது போன்று, தீபாவளிக்கும் அந்த அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இது மத நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்தும் என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *