RON95 பெற்றோலை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே வாங்கலாம் என்ற செய்தி தவறானது – நிதியமைச்சு மறுப்பு
கோலாலம்பூர்: செப்டம்பர் 24. 2025

RON95 பெட்ரோலை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே வாங்க முடியும் என்று சில ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கம் அத்தகைய திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் அது தெளிவுபடுத்தியது.
சமீபத்தில் வெளியான அறிக்கையில், RON95 பெட்ரோல் மானியத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆய்வு செய்து வந்தாலும், BUDI MADANI RON95 (BUDI95) திட்டமானது மக்களின் அன்றாடத் தேவைகள் தொடர்ந்து பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
“ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே வாங்க முடியும் என்ற வரம்பு, இந்த நோக்கத்துடன் ஒத்துப்போகவில்லை,” என்று அமைச்சு வலியுறுத்தியது.
மலேசிய மக்களின் நலனுக்காக RON95 மானியம் திறம்படப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் நிதியமைச்சு மீண்டும் கூறியது.
முன்னதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், BUDI95 திட்டத்தின் கீழ், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி முதல், அனைத்து மலேசியர்களுக்கும் மாதத்திற்கு 300 லிட்டர் RON95 பெற்றோலுக்கான மானிய உச்சவரம்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த நடவடிக்கை, தகுதியான பயனாளிகளுக்கு மானியங்கள் நியாயமாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதையும், கசிவுகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
📰 செய்தி: வீர சின்னையன்















