கேரித் தீவில் புதிய துறைமுக திட்டம் – சிலாங்கூர் அரசின் மூலோபாய முயற்சி

ஷா ஆலாம்
சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (PKNS) மற்றும் யாயாசான் சிலாங்கூர் இணைந்து, கேரித் தீவில் மூன்றாவது துறைமுகத்தை உருவாக்கும் முயற்சியில் கைகோர்க்கின்றன. மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியதாவது, 4,200 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதில், 2,500 ஏக்கர் கடலில் மற்றும் 1,700 ஏக்கர் கடலோரத்தில் மேம்படுத்தப்படும்.
இந்த திட்டம் அடுத்த 20–30 ஆண்டுகளில் சிலாங்கூரின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக இருக்கும். அதேசமயம், 13வது மலேசிய திட்டத்தில் உள்ள தென் சிலாங்கூர் மேம்பாட்டு பிரதேசத்திற்கும் (IDRISS) ஆதரவாக செயல்படும்.
அமிருடின் மேலும் தெரிவித்ததாவது, எந்த அரசு (மாநிலமா அல்லது மத்தியமா) திட்டத்தை முன்னெடுப்பது என்பதை அடுத்த ஒரு மாதத்தில் போக்குவரத்து அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படும். PKNS, மாநில அரசின் பிரதிநிதியாக துறைமுகத்தில் பங்கு வகிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
News Veera Sinnayen















