மலேசியாவின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பேட்டாளிங் ஜெயா பகுதியைச் சேர்ந்த திரு. பி.எம். கண்ணியப்பன்

பேட்டாளிங் ஜெயா – 68 தேசியக் கொடிகளுடன் கார் அலங்காரம்

பேட்டாளிங் ஜெயா– மலேசியாவின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பேட்டாளிங் ஜெயா பகுதியைச் சேர்ந்த திரு. பி.எம். கண்ணியப்பன் அவர்கள் தனது காரை 68 மலேசியக் கொடிகளால் அலங்கரித்து, தனித்துவமான தேசப்பற்று வெளிப்பாட்டை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக திரு. கண்ணியப்பன் அவர்கள் இந்த முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறார். இதன் மூலம் அவரது கார், ஒற்றுமை மற்றும் தேசபக்தியின் சின்னமாகத் திகழ்கிறது. இவர் உரிமை குறை எம்.ஜி.ஆர் குழுமம் (கோலாலம்பூர் / செங்கல்) கடந்த ஆறு ஆண்டுகளாக சமூகச் சேவையில் ஈடுபட்டு வரும் குழுவின் உறுப்பினரும் ஆவார்.

“இது என் நாட்டின் சுதந்திர உணர்வை உயிர்ப்பிக்க நான் செய்யும் சிறிய பங்களிப்பு. ஒவ்வொரு கொடியும் எங்கள் மக்கள் ஒற்றுமை மற்றும் பல்வகைப்படுத்தலின் அடையாளமாகும்,” என்று பெருமையுடன் ஜாலூர் கெமிலாங் கொடியை ஏந்தியபடி அவர் தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஊர்வலங்கள், நிகழ்ச்சிகள், கொடி அசைப்புகள் மூலம் சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், திரு. கண்ணியப்பன் போன்ற குடிமக்களின் தனித்துவமான பங்களிப்புகள், மலேசியர்களின் தேசப்பற்றையும் ஒற்றுமையையும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *