மலேசியன் இந்தியன் காங்கிரஸ் – கோலாலம்பூர் 79வது மாநாடு

2308.2025 கோலாலம்பூர் 79வது மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. சமூக ஒற்றுமையையும் சேவையையும் வலுப்படுத்தும் மிகாவின் உறுதியான பயணத்தில் இது மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இந்த மாநாட்டை தேசிய தலைவர், தான்ஸ்ரீ டத்தோ’ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அவர்கள் சிறப்பாகத் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
மேலும், டத்தோ’ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் துணைத்தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தேசிய தகவல் பிரிவு தலைவர், மத்திய செயற்குழு உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்கள், கூட்டாட்சி பிராந்திய பிரதிநிதிகள், ஊடகப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டு மாநாட்டிற்கு வலுசேர்த்தனர்.
மாநாட்டின் நிறைவில், கூட்டாட்சி பிராந்திய துணைத் தலைவர் மற்றும் பத்து பிரிவு தலைவர் திரு. டி.ஆர். பாலகுமாரன் அவர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளார்:
“எமது தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் காட்டிய பங்கு மற்றும் அர்ப்பணிப்பு இந்த மாநாட்டை உண்மையிலேயே அர்த்தமிக்கதாகவும் நினைவுகூரத்தக்கதாகவும் ஆக்கியது. ஏதேனும் குறைகள் இருந்திருந்தால் அதற்கு மன்னிப்புக் கோருகிறோம். ஒற்றுமை, அர்ப்பணிப்பு, உறுதியுடன் சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு, மிகாவை மேலும் உயர்த்திக் கொண்டு செல்வோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த மாநாடு, இந்திய சமூக முன்னேற்றத்திற்கான மிகாவின் விடாமுயற்சியையும், தலைமைத்துவ வளர்ச்சியையும், ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் என்ற பொதுவான நோக்கையும் மறுபடியும் வலியுறுத்தியது.

ஊடக தொடர்புக்கு:
naanorumalaysian.non@gmail.com















