பெனாங்:
பிரபல இந்திய பின்னணிப் பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா தலைமையில் நடைபெறவுள்ள “முதல் கனவே 3.0 – ஹரிஷ் ராகவேந்திரா லைவ் இன் பெனாங்” கச்சேரியை முன்னிட்டு, அவர் நேற்று பெனாங் மாநில எக்ஸ்கோ உறுப்பினர் மாண்புமிகு டத்தோ’ ஸ்ரீ சுந்தராஜூ சோமு அவர்களை அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு மிகுந்த நட்பான மற்றும் நேர்மறையான சூழலில் நடைபெற்றது. இசைக்கான ஹரிஷ் ராகவேந்திராவின் ஆர்வமும், பெனாங்கு ரசிகர்களுக்காக மேடையேறும் உற்சாகமும், யபி சுந்தராஜூவுக்கு பெரும் ஊக்கமாக இருந்தது.“ஹரிஷ் ராகவேந்திரா போன்ற உயர்தரக் கலைஞர் ஒருவர் நம் மாநிலத்திற்கு வருவது மிகப் பெரும் பெருமை. இது, பெனாங்கை ஒரு சர்வதேச பண்பாட்டு மையமாக மேலும் உயர்த்துகிறது,” என சுந்தராஜூ சோமு குறிப்பிட்டார்.
மாண்புமிகு சுந்தராஜூ சோமு, அனைத்து இசை ரசிகர்களையும் இந்தக் கச்சேரியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.“நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இசையின் அழகை கொண்டாடி, ‘முதல் கனவே 3.0’யை ஒரு மறக்கமுடியாத இரவாக மாற்றுவோம்,” என அவர் வலியுறுத்தினார்.ஹரிஷ் ராகவேந்திராவின் இந்த நேரடி கச்சேரி, பெனாங்கின் கலாசார அட்டவணையில் ஒரு சிறப்பு நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசை ரசிகர்கள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, மந்திரமயமான இசை உலகில் பங்குபெற அழைக்கப்படுகின்றனர்.

#YBDSR #PeraiKita #Penang2030















